Friday, December 12, 2008

இளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்திறனையும் பாதிக்கிறது


அமெரிக்காவில் வசதி படைத்த சூழலில் வளரும் மற்றும் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளிடத்தே நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து வறுமைச் சூழலில் நிலவும் அழுத்தங்கள் மத்தியில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாடு வசதி படைத்த சூழலில் வளரும் குழந்தைகளின் மூளைச் செயற்பாட்டினின்றும் வேறுபட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகளின் மூளையில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் பகுதியில் மின் கணத்தாக்கச் செயற்பாடுகளில் வேறுபாடு அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூளையின் prefrontal cortex பகுதியில் செயற்பாடு மந்தமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்கள் பரிசோதனையின் போது சில வகை பார்வைத் தூண்டல்களை இனங்காணவோ அல்லது அவற்றைப் பெற்று கொண்டதன் பின்னான செயற்பாட்டைக் காட்டவோ இல்லை என்றும் அதுமட்டுமன்றி (prefrontal cortex) பகுதியால் வழங்கப்படும் மேலதிக உத்வேகத்தன்மை குறைவாகக் காணப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதேவேளை முன்னொரு ஆய்வில் வறுமைச் சூழலில் வளரும் பிள்ளைகள் மற்றவர்களைக் காட்டினும் குறைவாகப் பேசுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இதற்காக வறுமைச் சூழலில் வாழும் பெற்றோரைக் குறை கூற முடியாது என்று கருத்துரைக்கும் ஆய்வாளர்கள் இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகள் எதிர்காலத்தில் எவ்வாறான சூழலில் வளர்க்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை எடுத்துரைக்கின்றன என்றும் அதற்கேற்ற வகையில் குழந்தை வளர்ப்புத் திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

குழந்தைகள் வறுமைச் சூழலில் வாழ்வதால் அவர்கள் பெற்றுக் கொள்ளும் தகவல்/ தூண்டல்களின் அளவு குறைந்திருப்பதும், அழுத்தங்கள் மத்தியில் வாழ்வதால் மூளை முற்றான அபிவிருத்தியை காட்டத் தவறுவதுமே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றைத் தவிர்க்கும் வகையில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்குரிய சரியான வளர்ப்புச் சூழலை தீர்மானிக்க வேண்டியதுடன் வறுமைச் சூழலில் வளரும் குழந்தைகளுக்குச் சரியான பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதைத்தான் தமிழ் புலவர் ஒளவையார் இளமையில் வறுமை கொடுமை என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டாரோ..!

Wednesday, December 10, 2008

2009ம் ஆண்டு இலங்கை வறுமை நிலையை அடையலாம்: உலக வங்கி எச்சரிக்கை


இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்வரும் 2009ம் வருடம் நான்கு வீதமாக குறைவடையலாம். எனவே, நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம் என உலக வங்கி எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள "2009 ஆம் ஆண்டுக்கான உலகின் பொருளாதார நிலை" எனும் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2009 ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் என்றுமில்லாதவாறான ஒரு சரிவை சந்திக்கலாம், அதன் பொருளாதார வளர்ச்சி நான்கு வீதமாக குறைவடையலாம்.

இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 வீதமாகும். ஆனால் அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடி மிகுந்த ஆண்டாகவே இருக்கும்.

உலகில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிகளே இந்த பாதிப்புக்கான காரணங்கள். இந்த பாதிப்புக்கள் தென்னாசிய பிராந்தியத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்ற தமது கணிப்புக்களை அடுத்த மாதமே தெரிவிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆணையாளர் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட போது, 2009 ஆம் ஆண்டு ஏழு வீதம் பொருளாதார வளர்ச்சிகள் எட்டப்படும் என கவர்ச்சிகரமாக விளப்பரப்படுத்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday, November 20, 2008

இலங்கை - அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம்

இலங்கை இறைமைக்கு வைத்த வேட்டு
இலங்கை அரசாங்கம் கிழக்கிலே யுத்தத்தை நடத்தி வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருப் பதாகவும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து கொண்டிருப்பதாகவும் அறிவித்துக் கொண்டிருக்கையில், மின்னாமல் முழங்காமல் கடந்த மார்ச் 5ஆம் திகதி கொழும்பில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது. இலங்கையின் சார்பில் பாதுகாப்புச் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவும், அமெரிக்காவின் சார்பில் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பியோக்கும் இந்த “நசுக்கிடாமல்” நடந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பி.பி.சியின் சந்தேசிய சிங்கள சேவையில். ஓப்பந்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று இலங்கை அரசின்சார்பில் அறிவித்த கெஹெலிய ரம்புக்வெல அறிவித்ததோடு சரி. இன்றுவரை எந்த விபரமும் வெளிவரவில்லை. புலிகளின் வீழ்ச்சியில் சந்தோசப் பட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கைக்கு மேலும் சந்தோசம் ஊட்டவென்று சொல்வதற்கு ரம்புக்வெல வுக்கு நிறையவே தகவல்கள் இருப்பதால் அவரிடம் யாரும் இது பற்றிக் கேட்கவில்லை.

ஆனால் அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் இந்த ஒப்பந்தம் பற்றி இவ்வாறு தெரிவித்தது. இந்த ஒப்பந் தம் இலங்கை. அமெரிக்க அரசுகளுக்கு போக்கு வரத்துத் தொடர்பான வழங்கல்களை மாற்றிக் கொள் ளவும், வழங்கவும், உதவி மற்றும் எரிபொருள்த் தேவைகளை விருப்பத்தின் பேரிலோ அல்லது விலை க்கோ செய்யவும், சமாதான பாதுகாப்பு நடவடிக்கை களின் போதும், மனிதாபிமான நடவடிக்கைகளின் போதும் வேண்டிய கூட்டு நடவடிக்கைகளுக்கும் இது உதவுகிறது. 'புதிய கொள்வனவுகள் மற்றும் மாற்றுச் சேவைகள் ஒப்பந்தம்' (வுhந நெற யுஉஙரளைவைழைn யனெ ஊசழளள ளுநசஎiஉiபெ யுபசநநஅநவெ) என்ற பெயரில் கைச்சாத்தான இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுக்கு இன்னுமொரு இராணுவத் தளத்தை உருவாக்கு வதற்கான ஒரு ஒப்பந்தமே என்பதை காலம் விரைவில் உணர்த்தப் போகிறது.

உண்மையில் இத்தகையதொரு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கான முயற்சி 2002 இலேயே நடந் தது. அப்போது இலங்கை வந்த கிறிஸ்டினா றொக்காவின் தலைமையிலான குழு அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பாதுகாப் பமைச்சர் திலக் மாரப்பணவுடனும் இது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார். 2002 யூ=லை 22 இல் கைச்சாத்திட இருந்த இது போன்ற ஒரு ஒப்பந்தம், இந்திய அரசாங்கம் தனது அதிருப்தியை வெளிக் காட்டியமையினால் கைவிடப்பட்டது. இது பின்னர் 2004 இல் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் அமெரிக் கர்களுடனான சந்திப்பின் போது, தாம் இந்த ஒப்பந்தத்திற்கு தயார் என அறிவித்ததை அடுத்து மீள வும் இது முடுக்கி விடப்பட்டது. ஆயினும் பின்னர் அது கைச்சாத் தாகவில்லை. அந்த ஒப்பந்தம் தான் இப்பொழுது யாரும் அறியாத நேரத்தில் “நசுக்கிடாமல்" கைச்சாத் தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 90ஆவது நாடாக இலங்கை ஆகியுள்ளது. இதுவரை 89 நாடுகள் ஏற்கெனவே கைச்சாத் திட்டிருப்பதால், இந்த ஒப்பந்தத் தின் விளைவுகள் எப்படிப்பட்ட வை என்று அறிந்து கொள்வது ஒன்றும் கடினமானதல்ல. ஆயினும் மார்ச் 5ஆம் திகதி கைச்சாத்தான இந்த ஒப்பந்தம் பற்றி யாரும் அக்கறைப்படுவதாகத் தெரிய வில்லை.

இந்த ACSA ஒப்பந்தத்தின் உண்மையான அர்த்தம் தான் என்ன? இந்த ஒப்பந்தத்ததைப் பற்றி மேலோட்டமாகப் பார்க்கையில் தெரிவது என்னவென்றால், அது அமெரிக்க இராணுவம் பரஸ்பர போக்குவரத்துத் தளபாட உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு சட்டபூர்வ கட்டமைப்பாக மட்டுமே தோன்றும். ஆனால் இதற்குப் பல ஆழமான அர்த்தங்கள் உண்டு. இந்த ஒப்பந்த மூலமாக, வெளிநாட்டு இராணுவ விற்பனைகள் மிகவும் வினைத்திற னுள்ள முறையில் செயற்படுத்தப் பட முடியும். ஆரம்பத்தில் Nயுவுழு நாடுகளுக் கிடையில் இருந்து வந்த ஒத்துழைப்புச் சட்டம் பலமுறை இருந்து வந்த பல்வேறு மூலோபாய நோக்கங்களுக்காக திரும்பத் திரும்பத் திருத்தப்பட்டு Nயுவுழு அல்லாத நாடுகளும் சேர்ந்து கொள்ளக் கூடிய நிலைக்கு மாற்றப் பட்டுள்ளது. இப்போது கைச்சாத் தான ஒப்பந்தமும் அப்படி மாற்ற ப்பட்ட ஒப்பந்ததமே மார்ச் 5ஆம் திகதி ஒப்பமிடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, அதன் ஆரம்பத் திலேயே அமெரிக்காவின் பயங்கர வாதஒழிப்பும், இறையாண்மை யைக் காத்தலும் என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்து கிறது. இந்த ஒப்பந்தத்தில் இதை விட பல மிக முக்கியமான விடயங் கள் கவனிக்கப்படாமலேயே விடப் பட்டுள்ளன. முக்கியமான விடயம் என்ன வென்றால், இந்த ஒப்பந்தத் திற்கு Nயுவுழு வில் இல்லாத ஒரு நாடு தெரிவு செய்யப்படுவதற்கு எந் தெந்த அடிப்படைத்தகுதிகள் அவசியம் என்பதாகும். இதை யாரும் கவனிக்கவில்லை. Nயுவுழு இல் அங்கம் வகிக்காத ஒரு நாடு, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமானால் அது இத்தகைய தகுதிளை அல்லது அவற்றில் ஒன்றைக் கொண்டிருக்கவேண்டும். அது அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் இருத்தல் வேண்டும். அல்லது அமெரிக்கப் படை வந்து தங்க அனுமதிக்க வேண்டும், அல்லது அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் அங்கு வருவதை அனுமதிக்க வேண்டும், அல்லது அமெரிக்கப் படைகள் தமது நடவ டிக்கைகளை அந்த நாட்டில் செய்ய அனுமதிக்க வேண் டும்.

இந்தத் தகவல்களை அமெரிக்க அரசின் பாதுகாப்புக் கட்டளை களிற் காணலாம். இன்னும் பல இரகசியக் கட்டளைகள் வெளி யிடப்படாமல் இருக்கின்றன. இந்த ஒப்பந்தம் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதை அனுமதிக்காது என்று அமெரிக்காவால் கூறப்படுகின்ற போதும், இலங்கையிலுள்ள அமெ ரிக்கத் தூதராலயம் வெளியிட்ட அறிவிப்பில் ஆயுதம் வழங்குவது தொடர்பான விபரமான குறிப்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எந்த விதமான விசாரணையும் இல்லாமல் எந்த விதமான யுத்த ஆயதங்களும் இதன் மூலம் வழங்கப்பட முடியாது என்று கொழும்பு ஊடகங்கள் அரச அறிவித்தலைத் திரும்பத் திரும்பத் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. இந்த ஒப்பந் தத்தின் பின்னரும் அனுமதிக்கப் பட்டதாகக் கூறப்படும் பொருட் களில் எண்ணெய், ஒயில், உதிரிப் பாகங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. இப்பட்டி யலின் இறுதியில் இவ் ஒப்பந்தத் தில் கைச்சாத்திடும் நாடுகளுக்கு அனுமதித்திருக்கும் ஆயுதங்களில் சிறியரக ஆயுதங்கள், தோட்டாக் கள், மோட்டார்கள், தானியங்கிப் பீரங்கிகள், எறிணைகள், கப்பற் துவக்குத் தோட்டாக்கள், தொகு திக்குண்டுகள் (ஊடரளவநச டீழஅடிள) நிலைக் கண்ணிகள், எறிகுண்டுகள் என்று ஒரு பெரும்பட்டியலே இருக்கிறது. இதுதான் இந்த ஒப்பந்தத்தின் உண்மை நிலைமை.

மேற்குப் பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவில் அமெரிக்கா தனது இராணுவ ஆதிக்கத்தை பலப்படுத் துவதில் பிலிப்பைன்ஸ் நீண்ட காலமாக பயன்படுத்தப் பட்டு வந்தது. பிலிப்பைன்ஸில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்த நாட்டில் ஏற்படுத்திய நிலைமை எமக்கு ஒரு நல்ல உதாரணமாகும். மின்டனோ எழுச்சியைத் தொடர்ந்து வந்த சுதந்திரப் போராட்டம் இரண்டு இலட்சத்திற் கும் மேற்பட்ட அமெரிக்க இராணு வத்தை அங்கு குவிக்கக் காரண மாக மாறியது. பிலிப்பைன்ஸில் நிறுவப்பட்ட கடற்படை மற்றும் விமானப் படைத் தளங்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எவ்வாறு பயன்பட்டன என்பது வரலாறு. கொரிய யுத்தம் மற்றும் விக்ரோறியன் யுத்தம் போன்ற வற்றிற்கு எவ்வாறு பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் செயற்பாட்டுத் தளமாக இருந்தது என்பது ஒன்றும் மறந்து போன கதையல்ல.

அமெரிக்காவின் இந்த புதிய வழியிலான ACSA ஒப்பந்தம் ஒன்று 1992 நவம்பரில் பிலிப்பை ன்ஸில் கைச்சாத்திடப்பட்டது. ஆமெரிக்கர்கள் இந்த ஒப்பந்த த்தை ஒரு மிகச் சிறப்பான நட்பு ரீதியான ஒரு ஒப்பந்தம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இன்றுவரை இலங்கையிலுள்ள யாரும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்கள் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தமது நீண்ட கால அமெரிக்க அடக்கு முறை அனுப வத்தின் காரணமாக பிலிப்பைன்ஸ் மக்கள் இந்த ஒப்பந்தத்தில் மறைந் திருக்கும் நோக்கங்களை அறிந்து கொண்டார்கள். ஒரு பலமான எதிர்ப்புப் போராட்டமொன்றை அவர்கள் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நடத்தினார்கள். அவர்களது போராட்டம் இன்னமும் தொடர் கிறது.

இலங்கையில் செய்து கொள்ளப் பட்ட இந்த ஒப்பந்தம் அமெரிக் காவின் செயற்பாடுகளை இலங்கை யில் அதிகரிப்பதற்கான ஒரு திட்ட மே. பாரசீகக் குடாப் பிராந்தியத் திலும் மத்திய ஆசியாவிலும் இன்றுள்ள உலக அதிகார அரசி யல் நிகழ்ச்சி நிரல்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவத்தை முன்னெப்போ தையையும் விட அதிகரித்துள்ளன. அமெரிக்காவின் இலங்கையுட னான ஒப்பந்தம் இந்த முக்கியத்து வத்தை கணக்கிலெடுத்துச் செய்யப் பட்ட ஒரு இராணுவ நோக்கிலான ஒப்பந்தமே. கிழக்கை விடுவிப் பதில் எந்த இறைமையைத் தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு இந்த அரசாங்கம் இன்று யுத்தத்தில் இறங்கியிருக்கிறதோ, அந்த இறை மையை அமெரிக்காவிடம் ஒரு கைச்சாத்தின் மூலம் வழங்கிவிட்டி ருக்கிறது. இந்த இறைமை இழப்புக்கு இக்கை ச்சாத்து ஒரு ஆரம்பம் மட்டுமே. விளைவுகள் இனித்தான் வெளித் தெரியப் போகின்றன

Tuesday, November 11, 2008

மன கவலைகளுக்கு பக்க விளைவற்ற அக்குபஞ்சர் சிகிச்சை


யானைப் பாகர்கள் அங்குசம் என்ற குச்சியின் முனையில் உள்ள சிறு ஊசியால் யானையின் உடலில் குத்தி, யானைகளைத் தங்களது கட்டுபாட்டில் வைத்திருப்பதை நாம் பல முறை பார்த்திருப்போம். இந்த முறையினை சற்று உற்று நோக்கினால், சீனர்கள் இந்த உலகிற்கு வழங்கிய மருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறை நம் கண்முன் வந்து போகும். இந்த நிலையில், இந்த மருத்துவ முறையில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவரும், ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்ட பல நோயாளிகளைக் குணப்படுத்தியவருமான டாக்டர் திருமதி கலா தியாகராசாவை, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, இந்த மருத்துவ முறை குறித்து, எம் மக்களின் சந்தேகங்களை கேட்டோம்.

· சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம், மற்ற சிகிச்சை முறைகளிலிருந்து எப்படி வேறுபட்டு, பலனைத் தருகிறது?

அக்கு என்றால் ஊசி என்றும், பஞ்சர் என்றால் குத்துவது என்றும் பொருள். சீனர்களால் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது இந்த மருத்துவமுறை. மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆங்கில மருத்துவம், ஆயுள்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்ட பல மருத்துவ முறைகளில், மருந்து, மாத்திரைகள் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் மருந்து, மாத்திரைகள் எதுவுமின்றி, சிறு ஊசிகளை மனித உடலில் குறிப்பிட்ட இடத்தில் குத்தி, அதன் மூலம் உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசை ஆகியவற்றின் செயல்திறனை ஊக்குவிக்கும் மருத்துவமுறை தான் இந்த அக்குபஞ்சர் மருத்துவமுறை. இந்த மருத்துவ முறையை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருக்கிறது.

நமது உடலில் பதினான்கு சக்தியளிக்கும் ஓட்டப்பாதைகள் உள்ளன. இந்த ஓட்டப் பாதைகளில் புள்ளிகள் உள்ளன. இந்த புள்ளிகளில், ஊசிகளைக் கொண்டு, அக்கு பஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆங்கில மருத்துவத்தில் நோயினால் தாக்கப்பட்ட பகுதியில் நேரடியாக சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆனால் அக்குபஞ்சர் முறையில்,நேர் எதிரான ஓட்டப்பாதையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு, தீ விபத்தால் பாதிக்கப் பட்ட உறுப்புகளுக்கு நுரையீரல் மற்றும் பெருங்குடல் தொடர்புடைய ஓட்டப்பாதையில் இருக்கும் புள்ளிகளில் சிகிச்சையளித்து குணமாக்குகிறோம். இதன் மூலம் நமது உடலில் உள்ள உறுப்புகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கிறது என்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

· இம்முறையில் நோயினை எப்படி கண்டறிகிறீர்கள்?

மனிதனின் கைகளில் உள்ள நாடிகளை பிடித்து பார்த்து அறிந்துகொள்கிறோம். இடது மணிகட்டுக்கு கீழே ரேடியம் ரத்தக் குழாயின் மீதிருக்கும் மேலோட்டமான நாடிகளும், அதே இடத்தின் ஆழத்தில் மூன்று நாடிகளும் உள்ளன. அதேபோல் வலது மணிகட்டில் மேலோட்டமாக இருக்கும் மூன்று நாடிகளும், அதன் ஆழத்தில் மூன்று நாடிகளும் உள்ளன. இந்த நாடிகளை பிடித்து பார்ப்பதன் மூலம், மனித உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதனை தெளிவாக அறிந்துக்கொள்ள முடியும்.

· இந்த சிகிச்சை முறையில், உடலில் ஊசி குத்தப்படுவதால் வலி ஏற்படுமே? அதற்காக எப்படி சிகிச்சை வழங்குவீர்கள்?

நாடியை பிடித்து, நோயை கண்டறிந்த பின், சக்தி வழங்கும் ஓட்டப்பாதையில் உள்ள அக்குபஞ்சர் புள்ளியில் சிறு சிறு ஊசிகளை குத்தி, மெதுவாக வலது புறமாக திருப்பி சுற்றி விடுவோம். சுமார் பத்து முதல் இருபது நிமிடம் வரை இந்த ஊசி உடலில் குத்தப்பட்டு இருக்கும். பின் அதனை எடுத்துவிடுவோம். இந்த ஊசிகளை நேரடியாக அக்குபஞ்சர் புள்ளியில் குத்தப்படுவதால், குத்திய இடத்திலிருந்து இரத்தம் வராது. நோயின் தன்மைக்கு ஏற்றவாறு ஊசிகளை குத்துவோம். நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால், இரு தினங்களுக்கு ஒரு முறையும், தாக்கம் குறைவாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறையும் குத்திக்கொண்டால் நோய் குணமாகும். அதே தருணத்தில் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு குத்த வேண்டிய ஊசிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும். இது மனித உடலில் உள்ள தசைகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதால், ஒரு முறை தாக்கி, குணமாக்கப்பட்ட நோய், மீண்டும் ஏற்படும் நிலை அக்குபஞ்சர் சிகிச்சை முறையில் இல்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

· இந்த சிகிக்சையின் மூலம் குணமாக்கப்படும் நோய்கள் என்ன?

மன அழுத்தம் உள்ளிட்ட மன நோய்கள், ஆண்மைக் குறைவு, வலிகள், நரம்பு தொடர்பான நோய்கள், நுரையீரல் தொடர்பான சைனஸ், ஆஸ்துமா, பெண்களுக்கு ஏற்படும் மகப்பேறு மற்றும் மாதவிடாய் கோளாறுகள், வயிறு, குடல் தொடர்பான நோய்கள், சிறுநீரக நோய்கள், கண் நோய்கள் ஆகியவற்றை எளிதாக குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சை முறையில் மருந்துகள் எதுவும் உட்கொள்ளத் தேவையில்லை. இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. கட்டணமும் குறைவு.

· சோரியாசிஸ் நோயினை இம்முறை மூலம் குணப்படுத்த முடியுமா?

இலங்கையின் கடலோர பகுதிகளிலும், தமிழகத்தின் எல்லா இடத்திலும் பரவலாக பரவியிருக்கும் இந்த நோய், தலையில் மண்டை ஓட்டின் மேல் பாகத்தில் பொடுகு போல் தோன்றி, பின்னர் உடலில் பல இடங்களில் வட்டமாகவும், சிறிதளவு உயர்ந்தும் காணப்படுகிறது. அதை சொரியும் போது, மீன் செதில் போல், பக்குகள் உதிரும். முழங்கை மடிப்பு, தொடை இடுக்குகளிலும், வயிறு, மூக்கு ஆகிய பாகங்களிலும் இவை அதிகமாக காணப்படும். முறையான மருத்துவத்தை மேற்கொள்ளாவிட்டால், உடல் முழுவதும் பரவி, மூட்டுகளில் வீக்கத்தை உண்டாக்கி, தாங்க இயலாத வலியினை ஏற்படுத்தும். இதனால் கை, கால்களை அசைக்க இயலாமல், ஒரே இடத்தில் முடக்கி விடும். எனவே இதனை ஆங்கில மருத்துவத்தில் 'சோரியாடிக் ஆர்த்திரைட்டீஸ்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த நோய்க்கு மற்ற சிகிச்சை முறைகளில் மருத்துவம் பார்த்தால், அவை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்கும். இதற்கான நிரந்தர தீர்வை அக்குபஞ்சர் மட்டுமே வழங்குகிறது. இம்முறையில் நுரையீரல், மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் தொடர்புடைய அக்குபஞ்சர் புள்ளிகளில் சிகிச்சை வழங்கினால், எத்தனை நாள்பட்ட 'சோரியாசிஸ்' நோயையும் குண மாக்கலாம்.

· மன அழுத்தத்திற்கு இந்த முறை மூலம் சிகிச்சை பெற்றால் பூரண பலன் கிடைக்குமா?

இன்றைய தினத்தில் அதிகமானோர் பாதிக்கப்படுவது மன அழுத்தத்தால் தான். காரணம் சொல்ல முடியாத மனக்கவலைகள், தாங்க இயலாத பணிப்பளு ஆகியவைகளைக் குறிப்பிடலாம். அதைவிட கம்பியூட்டரில் பணியாற்றும் தொண்ணூறு சதவீத இளைய சமுதாயத்தினர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இவர்கள் மற்ற மருத்துவ முறையில் சிகிச்சை எடுத்தால், பக்க விளைவுகளின் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது. ஆனால் அக்குபஞ்சரில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், மன அழுத்தம் ஏற்படுவதற்கான மூல காரணமா கிய தாறுமாறான இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றை சீராக்க முடியும். அதனுடன் உடலுக்கு தேவையான 21 தாது உப்புகளையும், அதன் குறைபாடுகளையும் கண்டறிந்து, 'பெரிகார்டியம்' மற்றும் இருதயம் ஆகிய பகுதிகளில் அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொண்டால் இவற்றைக் குணப்படுத்த இயலும்.

மேலும் கை, கால்களில் நடுக்கம், மனதை ஓரிடத்தில் நிலைப்படுத்த இயலாமை, உறக்கமின்மை ஆகியவற்றிற்கு தலைப் பகுதிகளில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளில் சிகிச்சை அளிப்பதன் மூலம்

குணப்படுத்த முடியும்.

Tuesday, November 4, 2008

பெண்களை பாதிக்கும் இருதய நோய்கள்


நீரிழிவு நோய்

உலகில் 70 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டி ருக்கும்போது இருதய நோய்கள் வருகிற வாய்ப்பும், மூளைவாதம் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது.

மரபியல் காரணங்கள் குடும்பத்தில் பெற்றோர் அல்லது முன்னோர்களுக்கு இருதய நோய் இருந்தால் அந்தப் பெண்களுக்கும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்பு அதிகம். இதில் நல்ல செய்தி என்னவெனில் இருதய நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் போதும், ஆரோக் கியமான வாழ்வியல் முறைகளுக்கு மாறி சுலபத்தில் அவற்றைத் தடுத்து திடமான ஆரோக்கியமான இதயத்துடன் வாழ முடியும். கண்டிப்பாக நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் இருதய நோய்கள் வருகிற வாய்ப்புகள் இருக்கிற பெண்கள் தடுப்பு நடவடிக்கையாக இருதயப் பரிசோதனை களைச் செய்து கொள்ள வேண்டும்.

ஆண்களை ஒப்பிடும்போது இல்லத்தரசிகள் பெரும்பாலும் தங்களைவிட கணவரின் உடல்நலம் பற்றித்தான் அதிகம் கவலைப்படு கிறார்கள். அதிலும் இருதய நோய் போன்ற சில நோய்கள் ஏதோ ஆண்களை மட்டுமே பாதிக்கும் என்பதைப் போல பார்க்கப்படு கிறது. இதனால் ஒரு பெண்ணாக நீங்கள் இருதய நோய்கள் பற்றி தெரிந்திருப்பதும், அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் மிக அவசியம். எச்சரிக்கை அறிகுறிகள் பெண்களுக்கு ஒரு வேளை சற்று மாறி இருக்கலாம் அல்லது கவனிக்கப்படாமல் இருக்கலாம். உலகம் முழுக்க இருதய நோய்களை ஏற்படுத்தும் அபாயம் மிகுந்த காரணிகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமாக இருக் கிறது. ஆனால் மாரடைப்பு வரும் பெண் களுக்கு இருக்கிற எச்சரிக்கை அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல இல்லாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு ஆண்கள் அடையும் நெஞ்சுவலியைப் போல பெண் களுக்கு வராமல் இருக்கலாம். ஆக ஒரு பெண்ணுக்கு இருதய நோய்களுக்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும், ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும். பெண்களின் இருதயக் கோளாறின் அறிகுறிகள் * மார்பில் அசௌகர்யம், அழுத்துதல், இறுக்கம் அல்லது அதிக பளு போன்ற உணர்வு, நடு மார்பில் வலி, குறிப்பாக இரண்டு மார்பகங்களுக்கு இடையில் அல்லது மார்பு எலும்புக்குப் பின்பாக.

* இந்த அசௌகர்யம் உடலின் மற்ற பாகங்களான கைகளின் மேற்புறம் (ஒன்று அல்லது இரண்டு கைகளிலும்), முதுகு, கழுத்து, தாடை மற்றும் மேல் வயிற்றுக்குப் பரவுதல், மூச்சிரைத்தல், இது தனி யாகவோ அல்லது வசதியற்ற மார்பு நிலையுடன் சேர்ந்தோ இருக்கலாம். மற்ற அறிகுறிகள் விவரிக்க முடியாத சோர்வு, பதற்றம், அதிகப்படியான பதற்றம், ஜீரணமின்மை அல்லது காற்று உருவானது போன்ற வலி,சட்டென்று உருவாகும் ஈர வியர்வை, தலை லேசாகி தளர்ந்து வீழ்தல்.

இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும். பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப் படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு, படபடப்பு, மூச்சிரைத்தல், நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே இருதய நோய்களுக்காக கவனிக்கப்பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்தவிதமான செயலிலும் மோசமடையக் கூடும். பெண்களுக்கு இருதய நோய்களின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது. மரபு வழி வரும் பிரச்சினை வயது, இனம் போன்ற மாற்ற முடியாதவை சில இருந்தாலும் வேறு சில வழிகளைப் பின்பற்றினால் இருதய நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.

இருதய நோய்களைத் தடுக்கச் செயற்படுங்கள் புகைபிடிக்காதீர்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். இப்படி சில நல்வழிகளைப் பின்பற்றுவதால் எதிர்காலத்தில் வரக்கூடிய இருதய நோய்களைத் தடுக்கலாம். இங்கே இருதய நோய்களைத் தடுக்கும் ஐந்து வழிகள் கூறப்பட்டிருக்கின்றன. பின்பற்றுங்கள். புகை பிடித்தல் மற்றும் புகையிலை பொருட்களைத் தவிர்க்கவும் இருதய நோய்த் தடுப்பு என்ற நிலைக்கு வரும்போது சிறிதளவு புகை பிடித்தலும்கூட பாதுகாப்பானது அல்ல. புகைவிடாத புகையிலை, குறைந்த டார், நிகோடின் சிகரெட் என எதுவும் பாதுகாப்பானது அல்ல. மேலும் புகை பிடிப்பவர் பக்கத்தில் இருப்பதாலும் இவை பாதிப்புகளை ஏற்படுத்தும். சிகரெட் புகையிலையில் ஏறக்குறைய 4800 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இதில் பெரும்பாலானவை உங்கள் இருதயத்திற்கும், இரத்தக் குழாய்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துபவை. இவை இரத்தக் குழாய்களை இறுக்கி விடுகின்றன. (அத்தி ரோஸ்கெலிரோசிஸ்) இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரும். இதுதவிர நிகோடின் இரத்தக் குழாய்களை குறுக்குவதால் இருதயத்தை அதிக வேலை செய்ய வைக்கிறது. இருதயத்துடிப்பு அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் உயர்கிறது. சிகரெட் புகையில் இருக்கிற கார்பன்மோனாக்சைட் இரத்தத்தில் இருக்கிற ஒக்ஸிஜனை வெளியேற்றிவிடுகிறது. இதனால் தேவையான ஒக்ஸிஜனைப் பெற இருதயம் அதிக வேலை செய்ய வேண்டி வருகிறது.தவிர பார்களில் அல்லது நண்பர்களுடன் இருக்கும் போது மட்டும் புகைபிடிப்பது கூட பாதுகாப்பற்றது. இவையும் இருதய நோய்களை உருவாக்கக்கூடிய அபாயம் உண்டு.

புகைபிடிக்கும் பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரை பயன்படுத்துபவர்கள் இருதயம் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு மாரடைப்பு, மூளைவாதம் இரண்டும் மற்ற சாதாரண பெண்களுக்கான அபாயத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது. இந்த அபாயம் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், புகைபிடிப்பதை நிறுத்திவிட்டால் இருதயம் பாதிக்கிற அளவு ஒரு வருடத்தில் நம்ப முடியாத அளவிற்குக் குறைந்துவிடுகிறது. எவ்வளவு சிகரெட் பிடித்தீர்கள் என்பதைப் பற்றிய கவலையில்லை. நிறுத்தியவுடன் அதற்கான பலன் கிடைக்கத் தொடங்கி விடும். சுறுசுறுப்பாக இருங்கள்: உடல் உழைப்பு நல்லது என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிவீர்கள். ஆனால் எவ்வளவு நல்லது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

மிதமான வேகம் கொண்ட உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதால் மோசமான இருதய நோய்கள் வரும் வாய்ப்பு கால் பங்கு குறைக்கப்படும். அதே நேரத்தில் உடல் உழைப்புடன், எடை சரியாக இருப்பது. நல்ல உணவு உண்பது போன்ற வாழ்க்கை முறைகளும் இருந்தால் இருதயத்திற்குக் கிடைக்கும் பலன்கள் அபரிமிதமானது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் அதிகரித்து, இருதயத்தின் சுருங்கி விரியும் திறன் கூடுகிறது. இதனால் இருதயம் சுலபமாக, நிறைய இரத்தத்தை வெளியேற்றும் சக்தி பெறுகிறது. உடற்பயிற்சியால் உங்கள் எடை அதிகரிப்பதும் தடுக்கப்படுகிறது. தவிர இருதயத்தை பாதிக்கும் மற்ற அபாயங்களான உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரோல் அளவு மற்றும் நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிழும். மேலும் மன அழுத்தமும் குறையும். இதுவும் இருதயப் பிரச்சினைகளுக்கு ஒரு காரணம். ஒரு வாரத்தில் அதிக நாட்களுக்கு குறைந்தது 30, 60 நிமிடமாவது மிதவேக உடற்பயிற்சி செய்யுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேற்சொன்ன அளவில் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றாலும் உங்கள் முயற்சியை விட்டுவிட வேண்டாம். குறைந்த அளவு பயிற்சியும் இருதயத்திற்குப் பலனளிக்கிறது.

தோட்டவேலை, வீட்டுவேலை, மாடிப்படி ஏறுவது, நாயுடன் நடப்பது என எல்லாமே மொத்த அளவில் சேரும் என்பதை நினைவில் வையுங்கள். கடினமாக உடற்பயிற்சி செய்தால் தான் நல்ல பலன் என்று இல்லை. பயிற்சியின் அளவை அதிகரிப்பது, நேரத்தைக் கூட்டுவது போன்றவை கூட பெரிய பலன்களைத் தரும்.

உங்கள் எடையைக் கவனிப்பது என்பது உங்கள் இருதயத்தைக் கவனிக்கிற ஒரு நல்ல வழி என்பதை மறக்காதீர்கள். 3. இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள்:

தொடர்ந்து பழங்கள், காய்கறிகள், முழுதானிய வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புப் பொருட்களைச் சாப்பிடுவதன் மூலம் இருதயத்தைப் பாதுகாக்க முடியும். குறைந்த கொழுப்பு உள்ள புரத வகை உணவுகள் கூட இருதய பாதிப்புகளைக் குறைக்கின்றன. சிலவகை கொழுப்புகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவது கூட முக்கியம். இதில் சாச்சுரேடட், பாலிஅன் சாச்சுரேடட், மோனோ அன்சாச்சுரேடட் மற்றும் ட்ரான்ஸ் /பேட் போன்றவை இருதயம் சார்ந்த இரத்தக் குழாய்களில் கொலஸ்டிரால் அளவை உயர்த்துவதன் மூலம் பாதிக்கின்றன. சாச்சுரேடட் வகை கொழுப்பு அதிகமாக இருப்பவை. வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய், பால் மற்றும் பனை எண்ணெய். இதில் டிரான்ஸ்பேட் வகை கொழுப்பு மிக மோசமானது என்பதற்கு ஆதாரங்கள் பெருகி வருகின்றன. காரணம் இது கெட்ட கொலஸ்டிராலை உயர்த்தி, நல்ல வகை கொலஸ்டிராலை குறைத்து விடுகிறது.

நன்கு வறுக்கப்பட்ட உணவுகள், பேக்கரி பொருட்கள், ஸ்நாக்ஸ் வகைகள் மற்றும் கொறிக்கப்படும் உணவு வகைகளில் டிரான்ஸ்/பேட் அதிகமாக உள்ளது. இருதயத்திற்கு ஆரோக்கியமான உணவு என்பது எல்லாவற்றையும் நிறுத்திவிடுவது அல்ல. பலருக்கு அவர்கள் உணவோடு பழங்களையும், காய்கறிகளையும் அதிகமாக சேர்க்க வேண்டி இருக்கும்.

பாலிஅன்சாச்சுரேட் வகை கொழுப்பில் வருகிற ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உங்கள் இருதயத்திற்குப் பாதுகாப்பானது. இது மாரடைப்பைத் தடுக்க உதவும். ஒழுங்கற்ற இருதயத் துடிப்பை சரிசெய்ய உதவும். இரத்த அழுத்த அளவை சமநிலைப்படுத்தும். ஒமேகா 3 இயற்கையாக மீன்களில் அதிகம் கிடைக்கிறது.

ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது என்பதில் மிதமாக குடிப்பதும் வந்துவிடுகிறது. ஆண்கள் ஒரு நாளைக்கு இரண்டு அளவும் பெண்கள் ஒரு அளவும் ஆல்கஹால் பருகுவது உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. அதிகமானால் ஆரோக்கியக்கேடு. இதனால் குடிப்பதை இருதயப் பாதுகாப்புக்கு தொடங்கக் கூடாது. ஏற்கெனவே குடிப்பழக்கத்தில் சிக்கியிருக்கிறவர்கள் இருதயத்தைப் பாதுகாக்கத்தான் இந்த வழி.

4. சரியான உடல் எடையைப் பராமரிப்பது

தொடர்ந்து உடற்பயிற்சியும், சரியான உடல் எடையில் இருப்பதும் நீண்ட நாளுக்கு இருதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் வழி. நடுத்தர வயதில் இருக்கும் போது எடை போடுவது என்பது உடலின் கொழுப்புத் திசுக்கள் சேருவதைக் குறிக்கிறது. இந்த அதிக எடை இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரோல் அளவு மற்றும் நீரிழிவு நோய் போன்றவை உருவாக வாய்ப்பு அளிக்கிறது. உங்கள் எடை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? ஆஙஐ என்கிற உயரம் மற்றும் எடையைக் கணக்கிடும் அலகின் மூலம் இதனை அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஆஙஐ 25 மற்றும் அதற்கு மேல் இருப்பது அதிக இரத்தக் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், மூளைவாதம் போன்றவை இருதய நோய்கள் வருவதற்கான அதிக வாய்ப்பு. இந்த ஆஙஐ அளவு ஒரு நல்ல ஆனால் முழுமையற்ற கணக்கீடு. காரணம் நல்ல சதைத் திரட்சியும், மிக ஆரோக்கியமாகவும் இருக்கிற ஆண், பெண்கள் அதிக ஆஙஐ அளவில் இருக்கலாம். இவர்களுக்கு எந்த இருதய பாதிப்பிற்கான அபாயங்களும் இருக்காது. காரணம் கொழுப்பை விட தசையின் எடை அதிகம். இதனால் இடுப்புச் சுற்றளவு வயிற்றுக் கொழுப்பை அளவிட பயன்படுத்தப்படுகிறது. இதுவும் ஒரு பயனுள்ள வழி. பொதுவாக ஆண்களுக்கு இடுப்புச்சுற்றளவு 40 இன்ச் அளவை விட அதிகம் இருந்தால் அதிக எடையில் இருப்பதாக கணக்கிடப்படுகிறது.

பெண்களுக்கு இடுப்புச் சுற்றளவு 35 இன்ச் தாண்டும்போது அதிக எடையில் இருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. இது பொது விதி. குறைந்த அளவு எடை குறைப்பது கூட பயன் தருகிறது. 10 சதவிகிதம் உங்கள் எடை குறைத்தால் இரத்த அழுத்தம் குறைகிறது. அதுவே இரத்த கொலஸ்டிரால் அளவைக் குறைக்கிறது. நீரிழிவு நோய் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

5. தொடர்ந்து உடல்நலப்பரிசோதனை செய்து கொள்வது:

உயர் இரத்த அழுத்தம், உயர் கொலஸ்டிரால் அளவு, நீரிழிவு நோய் மூன்றும் அமைதியாக அழிவு கொடுப்பவை. இருதயம் உட்பட முழு இருதயம் சார்ந்த அமைப்பு மண்டலத்தை இவை பாதிக்கக்கூடும். ஆனால் பரிசோதனை செய்யாமல் இந்த நோய் இருப்பதை அறிய முடியாது. தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே இவை எந்த அளவில் இருக்கின்றன என்பதையும், சிகிச்சைகள் தேவையா என்பதையும் சொல்லும்.

ழூ இரத்த அழுத்தம் : தொடர்ந்த இரத்த அழுத்த கவனிப்பை சிறுவயதிலிருந்தே தொடங்க வேண்டும். வயது வந்தவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். அளவு சரியாக இல்லை என்றால் அடிக்கடி பரிசோதிக்க வேண்டியிருக்கும். அல்லது இருதய பாதிப்பு வரக்கூடிய காரணங்களோடு இருக்கிறவர்கள் அடிக்கடி பரிசோதிக்க வேண்டியிருக்கும். சரியான இரத்த அழுத்த அளவு 120/80. இது வயது வந்தவர்களுக்கு, வயது அதிகரிக்க, அதிகரிக்க அதிக இரத்த அழுத்தம் இருக்கும் என்பது தவறானது.

ழூ கொலஸ்டிரால் அளவு : வயது வந்தவர்கள் குறைந்தது, ஐந்து வருடத்திற்கு ஒரு முறையாவது கொலஸ்டிரால் அளவைப் பரிசோதிக்க வேண்டும். அளவு சரியாக இல்லை என்றால் அடிக்கடி பரிசோதிக்க வேண்டி வரும். மரபு வழியில் தீவிரமாக இருதயப்பாதிப்புகள் வரக்கூடிய நிலையில் இருக்கும் சில குழந்தைகள் இந்தப் பரிசோதனை தேவைப்படும் நிலையில் இருப்பார்கள். ழூ நீரிழிவு நோய் : நீரிழிவு நோய் தொடர்பான மரணங்களுக்கு இருதய நோய்கள்தான் முக்கியக் காரணமாக இருக்கின்றன. காரணம் அதிக சர்க்கரை அளவு இரத்தக்குழாய்களின் இறுக்கத்திற்குத் தொடர்பு உடையது. கூடவே அதிக டிரை கிளிசரைடு, குறைந்த அளவு நல்ல கொலஸ்ட்ரோல், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு என பலவற்றோடு தொடர்பு உடையது. வயது வந்தவர்களிடம் ஏற்படும் இருதய நோய் தொடர்பான மரணம் நீரிழிவு நோய் இருக்கிறவர்களுக்கு, இல்லாதவர்களைவிட 2 முதல் 4 மடங்கு வரை அதிகமாக இருக்கிறது.

ஆரோக்கியமான இருதயத்திற்கு பத்து எளிய வழிகள்

1. உடற்பயிற்சி.

2. நிறைய தண்ணீர் குடிப்பது.

3. காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது.

4. ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது.

5. கொலஸ்டிரால் அளவை கவனித்துக் கொள்வது.

6. உப்பின் அளவைக் குறைப்பது.

7. புகைபிடிப்பதை நிறுத்துவது.

8. சரியான எடையில் இருப்பது.

9. இயல்பற்ற உடல் எச்சரிக்கை குறிப்புகளை புறக்கணிக்காதிருப்பது.

10. தொடர்ந்து இருதயத்தைப் பரிசோதிப்பது.

கர்ப்பகாலத்தில் உயர் இரத்த அழுத்தமா?


மனித வாழ்க்கையில் எப்போதுமே சாதாரண இரத்த அழுத்தம்தான், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான முக்கிய காரணி அதே போல கர்ப்பமாக இருக்கும் போது கூட, இரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால்தான் தாயின் ஆரோக்கிய மும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை யின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும்.

கர்ப்பமாவதற்கு முன்னாடியே கிட்டத்தட்ட 5 சதவீத பெண்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருக்கிறது. இது க்ரானிக் ஹைப்பர் டென்ஷன் அல்லது எஸன்ஷியல் ஹைப்பர் டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. 5லிருந்து 8 சதவீத பெண்களுக்கு, அவர்கள் கர்ப்பமாக இருக்கும் போது ஹைப்பர் டென்ஷன் ஏற்படுகிறது. இது கெஸ்டேஷனல் ஹைப்பர் டென்ஷன் அல்லது கர்ப்பத்தினால் வரும் ஹைப்பர் டென்ஷன் என்று அழைக்கப்படு கிறது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வில்லை என்றால் கர்ப்பத்தின் போது தாய்க்கும், சேய்க்கும் சீரியஸான பிரச்சினை கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தை கணக்கிடுதல் இரத்த அழுத்தம் கணக்கீடு இரண்டு எண்களாக, ஒரு சாய்வுக் கோடால் (/) பிரிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக சொல்வதென்றால் 110/80. முதலில் இருக்கும் எண் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவைக் குறிப்பிடு கிறது. இதை சிஸ்டோலிக் பிரஷர் என்று அழைப் போம். இரண்டாவதாக இருக்கும் எண், இதயம் விரியும்போது இரத்தக் குழாய் களில் ஏற்படும் அழுத்தத்தின் அளவைக் குறிப்பிடுகிறது. இது டயஸ்டோலிக் பிரஷர்.

கர்ப்பமாக இருக்கும்போது சாதாரணமாக பெண்களுக்கு, அவர்களுடைய இ ரத்த அழுத்தம் 120/80 அல்லது அதை விட குறைவாக இருக்கும். நீங்கள் கர்ப்பமாக இருந்து, இரத்த அழுத்தம் டெஸ்ட் செய்து கொள்ளும் போது உங்கள் சிஸ்டோலிக் பிரஷரின் அளவு 140 அல்லது டயஸ்டோலிக் பிரஷரின் அளவு 90ஆக இரண்டு தடவைக்கு மேல் இருந்தால் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். ஹைப்பர் டென்ஷனால் உங்கள் கர்ப்பம் எப்படி பாதிக்கப்படுகிறது?

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது எப்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படு கிறதோ, அப்போது நெஞ்சில் இரத்த ஓட்டம் பாதிக்கப் படும். இதனால் கருவின் சரியான வளர்ச்சி தடைப்பட்டு, குழந்தையின் எடை குறைச்சலாகப் பிறக்கும். இந்தப் பிரச்சினை, கருத்தரித்து 32 வாரங்களுக்கு முன்பே ஹைப்பர் டென்ஷ னால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அல்லது கட்டுப்படுத்த முடியாத க்ரோனிக் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கோ அதிகமாக ஏற்படுவதைப் பார்க்க முடியும். மேலும், ஹைப்பர் டென்ஷனால் டாக்டர் குறிப்பிட்ட பிரசவ திகதிக்கு முன்பே கூட (கருத்தரித்து 37 வாரங்களுக்கு முன்னால்) பிரசவம் ஆகி விடலாம். இதனால் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளும் பிறந்த புதிதில் நிறைய உடல் நலக்குறைவுகளை சந்திக்க நேரிடும். தவிர, சரி செய்ய முடியாத கற்றல் குறைபாடு மற்றும் மூளை வளர்ச்சி யின்மை போன்ற ஊனங்களுடன் பிறக்கலாம். கர்ப்பத்தின் போது வரும்

உயர் இரத்த அழுத்தத்தின் வகைகள்

1. க்ரோனிக் ஹைப்பர்டென்ஷன்

உயர் இரத்த அழுத்தமான க்ரோனிக் ஹைப்பர் டென்ஷன் சில நேரங்களில் கருத்தரிப்பதற்கு முன்னாடியோ அல்லது கருத் தரித்து 20 வாரங்களுக்குள் பரிசோதனையில் தெரியலாம். இந்த வகை ஹைப்பர் டென்ஷன் பிரசவத்துக்குப் பிறகும் கூட நீடிக்கும். கர்ப்ப மாக இருக்கும் போது இந்த ஹைப்பர் டென்ஷனால் கருவின் வளர்ச்சி பாதிக்கப் படலாம். ஒரு சில பெண்களுக்கு இந்த டைப் பிளட் பிரஷரை கன்ட்ரோல் செய்ய அந்தப் பெண் அதுவரை எடுத்து வந்த மாத்திரை களினால் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்க வேறு மாத்திரைகள் மாற்ற வேண்டி இருக்கும். க்ரோனிக் ஹைப்பர் டென்ஷனால் பாதிக்கப் பட்டிருக்கும் 25 சதவீத பெண்களுக்கு ப்ரீக்லாம்ப்சியா இருக்கலாம். இது கர்ப்பத்தின் போது வரும் ஒரு விதமான அதிக இரத்த அழுத்தம். இதில் பிரச்சினைகள் அதிகம்.

2. கெஸ்ட்டேஷன் ஹைப்பர் டென்ஷன் அல்லது கருத்தரிப் பினால் ஏற்படும் ஹைப்பர் டென்ஷன்

ஒரு பெண் கருத்தரித்து 20 வாரங்கள் கழித்து, அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது முதல் தடவையாக கண்டுபிடிக்கப் பட்டால், அது கெஸ்ட்டேஷனல் ஹைப்பர் டென்ஷன்! இந்த வகை இரத்த அழுத்தம் பொதுவாக குழந்தை பிறந்ததும் சரியாகி விடும்.

3.ப்ரீக்லாம்ப்சியா

எப்போது கெஸ்ட்டேஷனல் ஹைப்பர் டென்ஷனுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ இருக்கிறதோ, அந்த நிலை ஹப்ரீக்லாம்ப்சியா' என்றழைக் கப்படும்.

சிறுநீரில் புரதம் (அல்புமின்) வெளியேறுதல் தொடர்ச்சியான தலைவலி. பார்வைக் குறை பாடு. உதாரண மாக பார்வை தெளிவின்மை, பொருட்களெல்லாம் இரட்டையாகத் தெரிதல். தொடர்ச்சியான எடை அதிகரித் தல். முகம் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுதல். வலது பக்க மேல் வயிற்றில் வலி ஏற்படுதல்.

4. க்லாம்ப்சியா

எப்போது ப்ரீக்லாம்ப்சியா சிவியராகிறதோ அப்போது பாதிக்கப்பட்டவருக்கு வலிப்பு ஏற்படும். இது தான் க்லாம்ப்சியா. இந்த நிலை கர்ப்பமாக இருக்கும் தாய்க்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் ஆபத்தான நிலையாகும். இது போன்ற ஆபத்தான நிலையில் வழமையாக செக்கப் செய்து கொள் ளும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹக்லாம்ப் சியா' ஏற்படுவது மிகமிக அரிது.

சிகிச்சை

உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்ளுதல் மற்றும் இரத்த அழுத்ததுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டால், குழந்தை முழு வளர்ச்சியடைந்து பிரசவமாகும் வரைக்கும் பிளட் பிரஷரை கன்ட்ரோல் செய்ய வாய்ப்பு கள் அதிகம்.

கர்ப்பத்தில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத் திற்கு உப்புக் குறைத்த உணவு தேவையில்லை. ஆனால் க்ரானிக் ஹைப்பர் டென்ஷன் உள்ளவர்களுக்கு உப்புக் குறைத்த உணவு அவசியம். ப்ரீக்லாம்ப்சியாவை பொறுத்தவரை, நிறைய கேஸ்களில் டெலிவரியாவதுதான் தீர்வே. எப்போது டெலிவரி செய்ய வேண்டும் என்பது கர்ப்பத்தின் வாரங்கள் மற்றும் அவர் களின் நிலைமையைப் பொறுத்து தீர்மானிக் கப்பட வேண்டும்.

பிரசவ சமயத்தில் கருத்தரித்த பெண் களின் நிலைமை நல்லபடியாக இருந்தால் வலியை வரவழைத்து சாதாரண பிரசவம் டெலிவரி செய்தல். அதுவே, மேலே சொன்ன ஏதோ ஒரு பிரச்சினை அந்த கர்ப்பமான பெண்ணுக்கு இருந்தால் அல்லது பிரசவ வலி வரும் வரை குழந்தையால் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டால் அவர்களுக்கு சிசேரியன் செய்ய டாக்டர் முடிவெடுப்பார்

Tuesday, October 28, 2008

ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் நிலைப்பாடு








அறிவு கொண்ட மனித உயிர்களைஅடிமையாக்க முயல்பவர் பித்தராம் (பாரதி)

இயற்கை சார்ந்த உயிரியல் அமைப்பில் மக்கள் உடலமைப்பு ரீதியாக ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறந்துள்ளார் என்பது உயிரியல் உண்மை. ஆனால் இந்த உயிரியல் வேறுபாடே சமூகத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்றும் ஏற்படுத்தி வருகின்றது. ஆண் பெண் பாகுபாடு என்பது வித்தியாசமானது. சமூகமானது ஆணை பாதுகாவலனாகவும் வலிமை பொருந்தியவனாகவும் சித்திரித்து, அவனை உயர் நிலையில் வைக்கின்றது. ஆனால் பெண்ணோ பேதை. அவளை இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் உரியவளாகக் கருதி, அவளை இழி நிலைக்குத் தள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆண்வழிச் சமூகமானது ஆரம்பத்தில் பெண்களை அடக்கி ஒடுக்கியதன் மூலம் ஆணாதிக்க கலாசாரத்தினை நிலை நிறுத்தியது. உடல் ரீதியாகவும் உள ரீதியாவும் பெண்கள் ஆண்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர். அதன் முதற்கட்டமாக உலகில் பெண்கள் போகப் பொருட்களாக ஆண்களால் கணிக்கப்பட்டனர். தன்னலமின்மை, தியாகம், பொறுமை போன்ற சில குணாம்சங்கள் பெண்களிடம் இயல்பாகவே காணப்படுவதனால், ஆண்கள் அதை சாதகமாகப் பயன்படுத்தி தம் நிலைப்பாட்டை நிலை நிறுத்தினர். அந்த வகையில் பெண்ணானவள் மனைவியைக் குறிக்கும் பெயரால் மனைவியானாள். கணவனோ கணங்களின் தலைவன் என்பதில் இருந்து கணவனானான். ஆண் சமூகத்தின் தலைவன் ஆக, பெண்ணோ வீட்டின் வேலைக்காரி ஆனாள்.

பிள்ளைகளைப் பெறுதல் அவர்களை வளர்த்தல், உணவு தயாரித்தல், வீட்டையும் வீட்டுச் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருத்தல், ஒவ்வொரு வழியிலும் கணவனுக்கு ஒத்தாசையாக இருத்தல் முதலியன திருமணமான ஒரு பெண்ணின் கடமைகளாக ஆண் சமூகத்தால் வரையறுக்கப்படுகின்றது. ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மெய்யான பணி கணவனுக்கும் குழந்தைக்கும் பணி செய்தல் என்று ஆணாதிக்கம் கருதுகின்றது. பெண்களுக்கான வரையறைகளை வகுத்த ஆண் வீட்டில் ஆட்சியின் கடிவாளத்தைக் கைப்பற்றினான். பெண்ணோ இழி நிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். அவளின் வாழ்வு வீட்டுக்குள்ளேயே அமுங்கி விடுகின்றது. அவளின் உரிமைகள், வளர்ச்சி என்பன திட்டமிட்டு ஆணாதிக்க சமூகத்தால் நசுக்கப்படுகின்றன.

இவ்வாறு ஆணின் அடக்கு முறைக்கு உள்ளான பெண் அவனின் உடலின்ப வேட்கைக்கு கருவியானாள். இதனால் கேவலம் குழந்தைகளைப் பெறுகின்ற சாதனமாக ஆகிவிட்டாள். பெண்ணின் நிலையை மேலும் கீழ் இறக்குவதாக இது அமைகின்றது. பெண்களுக்கு ஒதுங்கி வாழும் நிலையையும், தங்கி வாழும் நிலையையும் உருவாக்கிய ஆணாதிக்க சமூகம் பெண்ணை ஆணின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் இயந்திரமாக பிள்ளை பெறும் கருவியாக மட்டுமின்றி ஆணுக்கும் சேவை செய்யும் அடிமையாகவும் கேவலப்படுத்தியது.

பெண்கள் மரணமடையும் வரையிலும் குழந்தைகளைப் பெறட்டும். அவள் வேறெதுவாகவும் இருப்பதற்குத் தேவையுமில்லை. அதற்கு உரிமையுமில்லை என்ற டி. மார்டின் லூதரின் கருத்தானது ஆணாதிக்க சமூகத்திற்கு துணை போவதாய் இருக்கின்றது. பெண் என்ன குழந்தைகளை உற்பத்தி செய்யும் கருவியா? அவளுக்கென்று தனிப்பட்ட உரிமைகள், உணர்வுகள் எதுவும் இருக்கக்கூடாதா? அவளும் ஆணைப் போல் இரத்தம், நரம்பு, இதயம் உடையவள் தானே. பின்னர் ஏன் பெண் மட்டும் அடிமைப்படுத்தப்பட்டு கொடூரமாக நடத்தப்படவேண்டும்.

இந்த ஆணாதிக்க சமூகமானது தமது அடக்கு முறைக்கு இசைவாக பல செயற்பாடுகளில் இறங்கியது. பழமொழிகளையும் பாரம்பரியக் கதைகளையும் தமக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு பெண்ணை அடிமைப்படுத்த முயற்சித்தது. அது அவர்களுக்கு ஆரம்பத்தில் வெற்றியையே தேடிக் கொடுத்தது எனலாம். அந்த வகையில் ""கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்'' என்று கூறியே பெண்ணின் அடிமைத் தனத்தை ஆண் சமுதாயம் பண்பாடாக்க முயற்சிக்கின்றது. கணவன் எவ்வளவு கீழ்த்தரமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி அவனது அடிமையாக சேவை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அச்சம், மடம், நாணம், பொறுமை, அடக்கம் என்பவை பெண்ணுக்கு மிக முக்கியமாக கருதவேண்டிய பண்புகள் எனக்கூறி ஆணாதிக்க சமூகத்துக்குள் பெண்ணைப் பேணி வைக்கின்றனர். பெண்ணை இவ்வாறு அடிமைப்படுத்துவதன் மூலம் ஆண் வழிச் சமூகம் வளர்ச்சிபெற்றது. பெற்று வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பெண்களை அடக்கி ஒடுக்கிய காலம் இன்று மலையேறிவிட்டது. பெண்ணின் பெருமை உலகுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது. பெண் புத்தி பின் புத்தி அல்ல. பெண் புத்தி முன்புத்தி என்று புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெண்ணினம் எதிர்பார்த்துப் போராட முயற்சி செய்யாததனால்தான் இதுவரை காலம் பெண்ணடிமைத்தனம் தொடர்ந்து வந்துள்ளது. ஆனால் பெண் இன்று போராடத் தயாராகிவிட்டாள். பெண்கள் இன்று மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக வெல்லற்கரியவர்களாக மீண்டும் எழுந்துள்ளார்கள். இன்று பெண்கள் பல துறைகளில் ஆண்களுக்கு ஒப்பாக நுழைந்து, அவர்களால் சிறந்த முறையில் பணியாற்ற முடியும். ஜெயிக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆணாதிக்கம் தகர்க்கப்பட்டு ஆண் பெண் சமத்துவம் நிலவ வேண்டுமாயின் முதலில் ஆண்களுக்கு இணையான கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் என்பன பெண்களுக்குப் பூரணமாகக் கிடைக்க வழி செய்யவேண்டும். மண வாழ்க்கையில் கடமைகள், உரிமைகள் இருபாலாருக்கும் சம நிலையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பெண் மீதான ஆணின் அத்துமீறல்களுக்கு தண்டனை அளிக்கப்படவேண்டும் இவ்வாறான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட்டால் தான் ஆண், பெண் சமத்துவம் நிலவ முடியும்.

மேலும் பெண் சுதந்திரமாகச் சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஒரு ஆணின் உழைப்பைச் சார்ந்து பெண் இருக்கும் வரை ஆணின் பொருளாதார நலனுக்கு உட்பட்டுத்தான் பெண் சிந்திக்க முடியும். எனவே இதிலிருந்து பெண் மீண்டும் சமூக உழைப்பில் சுய ஆற்றலுடன் வாழும் போதுதான் அவளது சிந்தனை வெளிப்படும். பெண்கள் சுயமதிப்பும் பொருளாதார சுயசார்பும் பெற்றுவிட்டால் மாத்திரமே சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.