Friday, October 10, 2008

சிறீலங்காவின் வருமானத்தைவிட கடன் தொகை அதிகரிப்பு - சர்வதேச நாணய நிதியம்

சிறீலங்காவின் கடன் தொகை வருமானத்தை விட அதிகரித்துச் செல்வதாகவும் சிறீலங்கா அரசாங்கத்தால் நாளாந்த செலவீனங்களை பூர்த்திசெய்ய கூடியளவுக்கு வருமானத்தை ஈட்டமுடியாதுள்ளதாகவும் சர்வதேச நாணயநிதியம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவின் முதலீட்டு உருவாக்கம் இப்பிராந்தியத்திலேயே மிகக்குறைவாக உள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் மொத்த உள்ளுர் உற்பத்தியின் 101 வீதம் கடன் உள்ளதாகவும் கடந்த ஜந்து வருடத்தில் இப்பிரதேசத்தின் கடன்தொகை வீதத்தினை மிஞ்சியுள்ளதாகவும் நேபாளத்தில் இது 63 வீதமும், பங்களதேசில் 49 வீதமும் இந்தியாவில் 85 வீதமம் ஆக காணப்படுவதாகவும் தெரியவருகிறது.

2004 ம் ஆண்டு சுனாமி தாக்கத்தின் பின் 2006 ம் ஆண்டு சிறீலங்காவின் வளர்ச்சிவீதம் 7.4 வீதமாக காணப்பட்டதாகவும் இது 2007 ம் ஆண்டு முதல் அரையாண்டுப்பகுதியில் 6.2 வீதமாக குறைவடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: