Friday, October 24, 2008

தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராது

தாய்ப்பாலின் மகிமை பற்றி இன்னும் சில தாய்மார் களுக்கு தெரியவில்லை. தாய்ப்பால் கொடுப்பதால் அழகு குறைந்து விடும் என்று நினைக்கும் பெண்கள் இருக் கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பிற்காலத் தில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் சுறு சுறுப்பாகவும் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இப்போது தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார் களுக்கு மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும் என்பதை டாக்டர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்து இருக்கிறார்கள். குழந்தைக்கு 1 வருடமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஓரளவு குறைவாக தாய்ப்பால் கொடுக்கலாம்.

இதன் முலம் மார்பக புற்று நோயை உருவாக்கும் ஹார்மோன்களின் அளவு கணிசமாக குறைகிறது. மார்பக செல்களில் மரபணு (டி.என்.ஏ.) சேதம் அடை வதை தடுக்க முடியும் என்றும் ராச்சல் தாம்சன் என்ற பெண் டாக்டர் பல்வேறு பெண்களிடம் நடத்திய ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளார்

No comments: